2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
அமரர் ஜெகசோதிமலர் சடாட்சரம் (சோதி)
வயது 77
உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka Neuilly-sur-Marne, France
பிறப்பு 30 JUL 1944***இறப்பு 21 JAN 2022

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகசோதிமலர் சடாட்சரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அம்மா !
 ஈராண்டு காலம்
 இமைப் பொழுதில் போனதம்மா
 ஆயிரம் சொந்தங்கள்
 அணைத்திட இருந்தாலும்
உங்களைப் போல் அன்பு காட்ட
 யாரும் இல்லை அம்மா! 

உங்களை நினைக்கும் போது
வரும் கண்ணீரை நாங்கள்
துடைத்தாலும் எங்கள்
இதயத்தின் வலி நிரந்தரமானது
உங்கள் அரவணைப்பிற்காக
ஏங்கி நிற்கின்றோம் அம்மா! 

பாசமும் பரிவும் தந்து
 பார்த்து பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய்
இருக்குதம்மா- என்றும் உங்கள்
நினைவுகளுடனேயே வாழ்கின்றோம்

மீண்டும் எங்களிடம்
வந்துவிடுங்கள் அம்மா!

பிரிவால் வாடும் பாசமிகு பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Posted on 23 Jan 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews