31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திருமதி தங்கராஜா சிவரூபி
திருமதி தங்கராஜா சிவரூபி
வயது 62
யாழப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka
தோற்றம் 18 NOV 1961***மறைவு 6 DEC 2023


யாழ். சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சிவரூபி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 03-01-2024 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் வீட்டுக் கிருத்தியக்கிரியை 05-01-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவருடைய இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

வீட்டு முகவரி:
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்

இங்ஙனம்,
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாஸ்கரன் - மருமகன் 
Mobile : +94766651626

Posted on 04 Jan 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews