1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ்
அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ்
(பார்புகழன்)
தோற்றம் : 4 யூலை 1973 - மறைவு : 10 மே 2009



திதி : 29 ஏப்ரல் 2010



நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இவர், சுப்பிரமணியம், காலஞ்சென்ற அரியமலர் தம்பதிகளின் அன்புமகனும்,

கெளசலாவின் அன்புக்கணவரும்,

வசிகரனின் பாசமிகு தந்தையும்,

குகதாசனின் அன்புச் சகோதரனும், தயாநிதியின் மைத்துனனும், ஜன்சன், உதிரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

ஆண்டு தான் ஒன்று ஆனதுவோ
உன் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை உதயா..!
பாசம் என்னும் பிணைப்பிலே இணைந்திருந்த
எம்மைவிட்டு எங்குதான் சென்றாயோ

உன் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை
நீ கொண்ட இலட்சியமும்
இல்லறம் மீது கொண்ட பாசமும்
உன்முன் வியாபித்து இருக்க
எங்குதான் சென்றுவிட்டாய் உதயா...?

காத்திருக்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எம்மைத் தேடி..?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரரத்திக்கின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி..!


தகவல்: உங்கள் பிரிவை தாங்கமுடியாமல் தவிக்கும், மனைவி, பிள்ளைகள், சகோதரன், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்

Posted on 30 Apr 2010 by Admin
நினைவஞ்சலி: கந்தையா நடராசா

Posted on 22 Apr 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 Next >>

Content Management Powered by CuteNews