1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம் C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை



இறந்த வயது 73
நீர்வேலி(பிறந்த இடம்) கனடா





யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.



கண்ணில் ஈரம் காயவில்லை - கால
ஆண்டு மட்டும் ஒன்றாகிவிட்டது
விண்ணகம் சென்றுவிட்ட எம் குலவிளக்கே - முதல்
ஆண்டுத் திவச ஆராதனையில்
மண்ணில் உன்மைந்தர் மருகர் பேரருடன்
வேண்டி உன்னை அழைத்து வேதனையில் விம்முகிறோம்!

நீர்வையம் பதியினிலே நீள நடந்து
பார்போற்ற ராஜ்மணி பந்தலை அமைத்து
சீர்மிகு செல்வனாய் சிந்தை தனில் அமர்ந்து
ஊர்மெச்சும உன்னத விளக்கமாய் இருந்து
வேர் ஊன்றி விழுதெறிந்து நிழல்தந்த விருட்சம்
பேர் பெற்ற சுப்பிரமணியம் எங்கள் பிதாமகன்!

C.T.P மணியம் என்று ராஜ்மணி என்று
சிறப்பான இடம்பிடித்து மேதினியில் வாழந்தவரே - உம்
நினைவுகள் சுமந்தபடி பிள்ளைகள், மருகர்கள்
பேரர்கள் கூடி நின்று கனேடிய மண்ணிலே
ஆண்டுத்திவசத்தில் அழுது ஆராதித்து வணங்குகிறோம்
அடைந்திடுக சாந்தி!!!



அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்தனை 02-02-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் (கனடா)

முகவரி:

Sri Ayyappa Samajam Of Ontario 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada

Posted on 02 Feb 2019 by Admin
Content Management Powered by CuteNews