மரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் தில்லைநாதர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)




இறப்பு: 2014-11-29
பிறந்த இடம்: சிறுப்பிட்டி --- வாழ்ந்த இடம்: சிறுப்பிட்டி



சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தில்லைநாதர் 29.11.2014 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அபிராமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி தெய்வானை தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற முத்துப்பிள்ளையின் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி, அபிராமிப்பிள்ளை, சோதிப்பிள்ளை, சதாசிவம் மற்றும் தெய்வானைப்பிள்ளை (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, கார்த்திகேசு, நடராசா, வீரசிங்கம் மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் சிவநாதன் (லண்டன்), கௌரி (லண்டன்), காலஞ்சென்ற கௌசல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்திரமாதவன் (ரவி லண்டன்), பவானி (லண்டன்) ஆகியோரின் மாமனும், அபிதா, தனுசியா, சிவகரன், மதுஷன், திலக்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.12.2014) புதன்கிழமை காலை 8 மணியளவில் அவரின் இல்லத்தில் நடை பெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் : பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
பிள்ளைகள் - சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.

Posted on 05 Dec 2014 by Admin
Content Management Powered by CuteNews