Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: அருளம்பலம் இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியர்)



பிறந்த இடம் :மாவிட்டபுரம் ***** வாழ்ந்த இடம்: நீர்வேலி



மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியர்) 26.03.2014 புதன்கிழமை காலமானார்.

அன்னார் யோகேஸ்வரி அம்மாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற அருளம்பலம் பொன்னம்மா தம்பதியரின் அன்புமகனும் அருளய்யா அருளம்மா தம்பதியரின்க மருமகனும் குகப்பிரியா (ஆசிரியை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்) காலஞ்சென்றவர்களான கங்காசுதன், கலாசுதன் ஆகியோரின் அன்புத்தந்தையும் இராஜேஸ்வரனின் ( கணக்காளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வடமாகாணம்) இன் அன்புமாமனும் பிரவினன், சங்கவி, சௌமியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் தம்பித்துரை காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, பாக்கியம், இளையதம்பி, வீரசிங்கம், வேலுப்பிள்ளை, செல்வநாயகி ஆகியோரின் அன்புச்சகோதரனும் சரஸ்வதி, புவனேஸ்வரி காலஞ்சென்றவர்களான பக்தவத்சலம், இரதசேகரம், சுகுணாவதி ஆகியோரின் அன்புமைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.03.2014) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சீயாக்காடு மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் : இராஜேஸ்வரன் (மருமகன்)

தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரன் (மருமகன்) - இராசவீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி , 077 3907687

Posted on 29 Mar 2014 by Admin
Content Management Powered by CuteNews