Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: சிவக்கொழுந்து சேனாதிராசாதி


இறப்பு: 2013-06-26
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி


நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சேனாதிராசா நேற்று முன்தினம் (26.06.2013) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி குஞ்சுப்பிள்ளை தம்பதியரின் மகளும் காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற செல்லையா சேனாதிராசாவின் அன்பு மனைவியும் சிவராணி, லோகநாதன், சிவஞானவதி, லலிதாராணி, இராஜராஜேஸ்வரி, ஈஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயும் சச்சிதானந்தம், பத்மாவதி, கிருஸ்ணபிள்ளை, செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான குகதாசன், கேதாரகௌரி மற்றும் கருணாநிதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும் நடனசபேசன் (ஜேர்மனி), நிரஞ்சனா (பிரான்ஸ்), ஜெயசாந்தன் (கனடா), டர்சிகா (கொழும்பு), சுஜீவன் (கனடா), ஆதித்தியா, காலஞ்சென்ற பரணீதரன், நிசாதரன் (ஆஸ்திரேலியா), நிரோதரன், கிரிதரன், கின்துஷா, கணேசானந்தா (கனடா), நிதுஷா (சுவிஸ்), லக்ஷிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் மதுஷன் (பிரான்ஸ்), தனுஷன் (பிரான்ஸ்), அஜிந் (ஜேர்மனி), பிரஜிந் (ஜேர்மனி) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.06.2013) வெள்ளிக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 11மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - யானை வைரவர் கோயிலடி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.

Posted on 27 Jun 2013 by Admin
Content Management Powered by CuteNews