Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: சதாசிவம் பாலசுப்பிரமணியம் (நடுவில்)


 சதாசிவம் பாலசுப்பிரமணியம் (நடுவில்)

மரண அறிவித்தல்: சதாசிவம் பாலசுப்பிரமணியம் (நடுவில்)

பிறப்பு: - இறப்பு:2012-10-05
பிறந்த இடம்:சிறுப்பிட்டி*******வாழ்ந்த இடம்:டென்மார்க்



சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் (05.10.2012) வெள்ளிக்கிழமை டென்மார்க்கில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதா சிவம்செல்லாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கமலலோயினியின் அன்புக் கணவரும், சிவசுப்பிரமணியம் (டென்மார்க்), அமிர்தநாயகி, லோகநாதன் (சுவிஸ்), ஸ்ரீபத்மநாதன் (டென்மார்க்), காந்தி (சுவிஸ்), தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும், பார்த்தீபன் (டென்மார்க்), செந்தீபா (UK), பிரதீபன் (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் டென்மார்க்கில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Posted on 12 Oct 2012 by Admin
Content Management Powered by CuteNews