Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி புஸ்பராணி மகேந்திரன்




திருமதி புஸ்பராணி மகேந்திரன்
இறப்பு: 2012-06-10

பிறந்த இடம்: நீர்வேலி

வாழ்ந்த இடம்: நீர்வேலி



பெரியபுலம், அச்செழு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி மகேந்திரன் நேற்று (10.06.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் சதாசிவம் மகேந்திரனின் (ஓய்வுபெற்ற லிகிதர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான துரையப்பாசேதுப்பிள்ளை தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்சின்னம்மா தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான நடராசா (பொறியியலாளர்), புவனேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும், சத்தியகுமார் (பொறியியலாளர், லண்டன்), வசந்தா (ஆசிரியை, நீர்வேலி றோ.த.க. பாடசாலை), காலஞ்சென்ற சாந்தி (ஆசிரியை), சசிக்குமார் (ஆசிரியர், நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயும், வசந்தினியின் (லண்டன்) அன்பு மாமியும், அர்ஜினின் (லண்டன்) அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.




தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - பெரியபுலம், அச்செழு, நீர்வேலி.

Posted on 15 Jun 2012 by Admin
Content Management Powered by CuteNews