Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா‏



சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா
இறப்பு: 2012-03-01
பிறந்த இடம்:நீர்வேலி வாழ்ந்த இடம்:வவுனியா




நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, சின்னபுதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா நேற்றுமுன்தினம் (01.03.2012) வியாழக்கிழமை அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் புஸ்பமலர் தம்பதியரின் அன்பு மகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு மற்றும் மலர்சோதி தம்பதியரின் அன்பு மருமகனும், உமாதேவியின் அன்புக் கணவரும், சாயிசிந்து, அபிராமி (வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய மாணவிகள்), சாயிவசந் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாந்தினி (இந்தியா), ஸ்ரீதரன் (சுவிஸ்), ஸ்ரீபிரேமநாத் (கனடா), காலஞ்சென்ற ஸ்ரீறமணன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், விஜயகுமார், சாரதாதேவி, சிவலிங்கம், இந்திராதேவி, சிவாஸ்காந்தன், சிவநேசன், காலஞ்சென்ற சிவபாலன் மற்றும் சிவரூபன், சிவகரன், கார்த்திகா ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.03.2012) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் வவுனியா வெளிக்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் :குடும்பத்தினர்.


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். - 54, சின்னபுதுக்குளம், வவுனியா.

Posted on 04 Mar 2012 by Admin
Content Management Powered by CuteNews